FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




THE MYSTERY OF 7, 8, 14, 33, 40, 66, 80 | LEVITICUS CH 12

THE MYSTERY OF 7, 8, 14, 33, 40, 66, 80 | LEVITICUS CH 12

அன்பானவர்களே🙏
கேள்வி : லேவியராகமம் 12:4-5

Leviticus 12:3 - And on the Eighth Day the Flesh of his Foreskin shall be Circumcised.

ஸ்திரியானவள் ஆண் பிள்ளையை பெற்றெடுத்தால் ஏன் 33 நாட்கள் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?

ஸ்திரியானவள் பெண் பிள்ளையை பெற்றெடுத்தால் ஏன் 66 நாட்கள் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?

லேவியராகமம் 12:4-5
இதின் ஞானம் என்ன??
பதில் :
ஸ்திரியானவள்:
சபை என்கிற தகுதிக்குள்ளாக அழைக்கப்பட்டவர்கள்.
Revelation 12:1, Luke 15:8

ஆண் பிள்ளையை பெற்றெடுப்பது:
பலமுள்ள ஒரு நிலையை வெளிப்படுத்தும்.

பெண் பிள்ளையை பெற்றெடுப்பது:
பலவீனம் உள்ள ஒரு நிலையை வெளிப்படுத்தும்.
33 - நம் ஆண்டவரின் வயதை நேரடியாகக் குறிக்கின்றது.
அப்படி என்றால் அது நம் ஆண்டவரின் பரிசுத்தமான வாழ்க்கையை குறிக்கும்.
66 - என்பது - 33 - ன் இரட்டிப்பு.
முதலில் இது ஸ்திரியையும் அவரது சுத்திகரிப்பையும் குறித்து பேசுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சபை அழைப்பில், பலமுள்ளவர்கள் பலவீனமுள்ளவர்கள் என்கிற இரண்டு நிலையில் இருப்பார்கள் என்பது தெரியும் - Romans - 15:1

ஸ்திரியானவள் - ஆண் பிள்ளை - பலமான நிலை - ஆண்டவருடைய வாழ்க்கையில் (33) சீராக தொடர்ந்து நடக்க வேண்டும்.
ஸ்திரியானவள் - பெண் பிள்ளை - பலவீனமான நிலை - ஆண்டவருடைய வாழ்க்கையை (33) வாழ்வதில் அதிக (66) பிரயாசப்பட வேண்டும்.

மேலும் சிறப்பான கருத்துக்களை வரவேற்கின்றோம்.

கிறிஸ்துவுக்குள்

23.08.2025
Hope the following content gives us better understanding. Share your views. Thank you.

எண்கள் கடவுளின் திட்டத்தை பேசுகிறதா?? ஆச்சரியம்! ஆனால் உண்மை! எப்படி???


லேவியராகமம் 12 ஆம் அதிகாரத்தில் தேவன்; பிரசவித்த தாய்க்கு சில கட்டளைகளைக் கூறியுள்ளார்.


✨ஆண் குழந்தையை அவள் பிரசவித்தால்:
1. மாதவிடாய் காலங்களில் இருந்தது போல ஏழு (7) நாட்கள் தீட்டாக இருக்க வேண்டும்.
2. பின்பு 8 ஆம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும்! (இது தேவனின் உடன்படிக்கைக்கு அடையாளம். முதலில் பிறக்கும் ஆண் பிள்ளை தேவனுக்கு சொந்தம்).
3. பின்பு 33 நாட்கள் தாய் தன்னை சுத்திகரிக்கும் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. பின்பு ஆசரிப்புக் கூடாரத்திற்க்கு சென்று பலியிட வேண்டும். (மரியாள் லூக்கா 2:22-24 நினைவிற்கு வருகிறது).
ஆண் பிள்ளை பெற்ற தாயின் சுத்திகரிப்பு காலம் = 7 + 33 = 40 நாட்கள்.


✨பெண் குழந்தையை அவள் பிரசவித்தால்:
1. 14 நாட்கள் தீட்டு (பெண் சந்ததியைக் கொடுக்கக் கூடியவள் என்பதால் இரட்டிப்பு தீட்டு).
2. 66 நாட்கள் சுத்திகரிப்பு.
3. பலியில் மாற்றம் இல்லை.
பெண் பிள்ளை பெற்ற தாயின் சுத்திகரிப்பு காலம் = 14 + 66 = 80 நாட்கள்.


8 ஆம் நாள்:
உடலின் அசுத்தமான பகுதி நீக்கப்படுவது போல, 8000 ஆண்டில் மனித குலமும் தேவனின் ராஜ்யத்தில் நுழையும் அடையாளம்.


14 ஆம் நாள்:
இஸ்ரயேல் ஒரு பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நிசான் 14ல் பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. அதேபோல் கிறிஸ்துவும் நம்மை மீட்டார். மத்தேயு 1 ஆம் அதிகாரத்தில் 14+14+14 தலைமுறைகள் காணப்படுகின்றன.


33 நாட்கள்:
33 நாட்கள் காத்திருந்த தாயைப்போல் கிறிஸ்துவும் 33½ ஆண்டுகள் வாழ்ந்து, தன் ஜீவனைத் தந்து நம்மை மீட்டார்.


40 நாட்கள்:
நோவாவின் பெருமழை, மோசேயின் 40 நாட்கள், இஸ்ரயேலின் வனாந்திரம், கிறிஸ்துவின் சோதனை ஆகியவை பாடுகளின் அடையாளம். ஆனால் இவை நம்மை புடம் போட்ட தங்கமாக ஆக்குகின்றன.


66 நாட்கள்:
66 புத்தகங்களைக் கொண்ட பரிசுத்த வேதாகமத்தின் அடையாளம்.


80 நாட்கள்:
இது 14 + 66 ஆகும். மோசே 80வது வயதில் அழைக்கப்பட்டார். தேவனின் 66 புத்தகங்கள் நம்மை சுத்திகரித்து, இறுதியில் எருசலேமாக மாற்றுகின்றன.


இதிலிருந்து கடவுளின் பிரம்மாண்ட ஞானத்தைக் கண்டு நாமும் வியக்கிறோம். காதுள்ளவன் கேட்கக்கடவன்!


ஜெபம்:
அப்பா! எங்கள் அன்பின் பிதாவே, மண்ணாகிய நாங்கள் பொன்னைப் போல விளங்கிட இத்தனை ரகசியங்களைத் திறந்துக் காட்டும் உமது கிருபைக்கு முன் எம்மாத்திரம்! உங்கள் அன்பு மகனின் நாமத்தில் எங்கள் ஜெபம் கேளும்! நல்ல தகப்பனே... ஆமென்.


NUMBERS THAT SPEAKS HIS PLAN - PDF

Comments

Post a Comment