THE gate of blessing
ஆசிர்வதிக்கிற என் ஆண்டவரே..... ஆண்டவரே.
- நீர் வாசலில் நின்று கதவைத் தட்டின சத்தத்தினாலே, என் இதயம் திறந்து சதையாய் மாறினது:
நீர் கதவைச் சாத்தும் போது. நீர் அறிந்த கன்னிகையாய் உம்மோடே சேர்ந்து உள்ளே வர அனுமதியும்
பேதுருவின் மூலம் எங்களின் அழைப்புக் கதவைத் திறந்தவரே, ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும். ஒருவரும் திறக்கக் கூடாதபடி பூட்டுகிறவரும், பரலோகத்தின் திறவுகோல்களை உடையவராக நீரே இருக்கிறீர் --என் ஆண்டவரே!!
நீர் கதவைச் சாத்தும் போது. நீர் அறிந்த கன்னிகையாய் உம்மோடே சேர்ந்து உள்ளே வர அனுமதியும்
பேதுருவின் மூலம் எங்களின் அழைப்புக் கதவைத் திறந்தவரே, ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும். ஒருவரும் திறக்கக் கூடாதபடி பூட்டுகிறவரும், பரலோகத்தின் திறவுகோல்களை உடையவராக நீரே இருக்கிறீர் --என் ஆண்டவரே!!
பேழையின் கதவு பூட்டப்பட்டு, ஏழுநாள் மழையில்லாமல்..நோவாவின் விசுவாசம் சோதிக்கப்பட்டதே;
இந்த ஏழையின் அறிவுக்கதவு திறக்கப்பட்டு ஏழாம் நாளின் திறப்புகளால்-
என் விசுவாசத்தை வர்த்திக்கச் செய்கின்றீர்; பல நேரம் என் மனக்கதவைத் தட்டுகிறீர்.
சில நேரம் நான் கதவைத்திறக்க யோசிக்கிறேன்; ஆனாலும், நீர்..-அத்துமீறாமல். எளியோனாகிய என் அனுமதிக்காக. பொறுத்திருக்கிறீர்..!
இந்த ஏழையின் அறிவுக்கதவு திறக்கப்பட்டு ஏழாம் நாளின் திறப்புகளால்-
என் விசுவாசத்தை வர்த்திக்கச் செய்கின்றீர்; பல நேரம் என் மனக்கதவைத் தட்டுகிறீர்.
சில நேரம் நான் கதவைத்திறக்க யோசிக்கிறேன்; ஆனாலும், நீர்..-அத்துமீறாமல். எளியோனாகிய என் அனுமதிக்காக. பொறுத்திருக்கிறீர்..!
ஆ.... என் ஆண்டவரே.. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை நொறுக்குகிறவரே.. என்--நெஞ்சக்கதவு உமக்குமுன் எம்மாத்திரம்?
பூட்டின கதவுகளுக்குள் பிரவேசித்து, உம் சீடர்களின் சந்தேகத்தையும். தோமாவின் துணிகரத்தையும் பொறுத்துக்கொண்டவரே,
இதோ,இரும்புக்கதவும் உம் பிரசன்னத்தால், தானாய் திறவுண்டு.. பேதுருவை விடுவித்தீரே....
கதவின் கைப்பிடி என்னிடமே உள்ளது.
கனத்த இருதயத்தோடு திறக்கின்றேன்.--
கதவின் கைப்பிடி என்னிடமே உள்ளது.
கனத்த இருதயத்தோடு திறக்கின்றேன்.--
கர்த்தாவே... உள்ளே ---வாரும்:
ஆம்..என் ஆண்டவரே...
ஆம்..என் ஆண்டவரே...
பாவக்கதவு என் பாதையை அடைக்கப் பார்க்கிறது. உலக பாசக்கதவு எனக்கு அடைப்பை ஏற்படுத்துகிறது. ' என் யோசனைக்கதவு குழப்பத்தில் ஸ்தம்பிக்கிறது.
தட்டுங்கள் திறக்கப்படும். என்று நீர் தந்த தைரியத்தினால்,... நான் எட்டும் போதெல்லாம்..- எனக்கு, பரலோகத்தின் பலகணிக் கதவு திறக்கிறது.
உம் அறிவாகிய திறவு கோல்களினால், அழியாமை எனும் கதவு திறக்கக் கண்டேன். திரும்புகிற பக்கமெல்லாம் சோதோமின் கதவு
உலகம் திறந்து அழைக்கிறது:
விரும்பித் தேடின வாசற்கதவோ இருக்கமானதாய் உள்ளது;
ஆனாலும் உம்மாலே...அது இன்பமாய் உள்ளது.
ஆனாலும் உம்மாலே...அது இன்பமாய் உள்ளது.
ஆம்... என் ஆசிர்வாதக் கதவு - இனி ஒருபோதும் அடைபடாது.
ஆமென்.
Comments
Post a Comment