TAMIL PROSE POETRY
SELECT YOUR PSALM HERE
சர்வத்தையும் சிருஷ்டித்தவரின் சாயல்- பரிசுத்தமும்... நீதியுமே!
சுத்தம் என்ற வார்த்தையின் முழுப் பூரணத்தன்மையே, பரிசுத்தம்
துல்லியமான திவ்யஜீவாலை போன்ற பட்சிக்கின்ற நேர்மையே நீதி
மாறாத இவ்விரண்டிலிருந்து பிறப்பதுவே. உண்மை (or) சத்தியம்.
அசுத்தத்திலிருந்து...சுத்தத்தைப் பிறப்புக்கிறவரின், அபூர்வமான கிரியையே...
ஆண்டவர் மூலம் வெளிப்பட்ட தயவு:
தடுமாற்றம் கண்டறிந்து தடுக்கப்படவே...
தயவு நமக்குத் தயவு செய்கிறது;
தொடர் மாற்றம்.. தொடர்ந்து. நல்மாற்றம் வரும்வரை, ஓங்கி நிற்கும் தயவு...ஒய்வெருப்பதில்லை:
பயிற்சியின் நோக்கம் பலன் பலன் பெறும்படிக்கே;
இருதய நோக்கத்தின் முயற்சி;
பயிற்சியினால் வளர்ச்சிவெற்று,
அசுத்தமானதைப் பகுத்தறிந்து...
அதில் சுத்தமானதை படித்து அறிந்து,
மாம்சத்தில் ஏழுமுறை விழுந்தாதும்...
மறைக்காத உள்ளத்தோடு...
மறுபடியும் எழுந்திருந்து,,
மறுரூப மலைக்கு ஒடி,
மகிமையையும்.. பரிசுத்தத்தையும்...நீதியைபும் மிளிரச் செய்வதே,
மணவாளனுக்கு ஆயத்தமாகும் மணவாட்டியின் வேலை;
நீதியின் வஸ்திரம் தரிக்கப்பட்டதும்;
கிருபாசன சலுகை அளிக்கப்பட்டதும்
சுத்திகரிக்கும் சத்தியம் கொடுக்கப்பட்டதும்,
சுகம்பெறும் ஐக்கியம் சேர்க்கப்பட்டதும்;
சிட்சை என்னும் மருந்து தெளிக்கப்படுவதும்,
பரிசுத்தமும்.நீதியும் நம்மில் வளர்ந்து பெருகவே;
அறியாமைக்கு தரப்படுவது... இரக்கம்:
அறிந்தும் செய்யும் அசட்டு தைரியத்துக்கு, சிட்சையும்...
சீர்படுத்தலும் அவசியமாமே;
இரக்கத்தை மிகைப்படுத்தி..
கிருபையை மட்டுமே விரும்பி,
அநீதியில் பிரியப்பட்டு..
நீதியில் குறைவுபட்டு...
சலுகைகளால் மட்டுமே சிங்காசனம் பெற விரும்பினால்,
விழுகையின் விளிம்புக்கு விரைவது போலாகிவிடும்;
பாவியின் மேல் சினம் கொள்ளுகிறவரும்;
பாவத்தை ஒரு துளியும் அங்கீகரிக்காதவரும்,
பட்சபாதமில்லாதவரும்... பட்சிக்கிற அக்கினியுமானவரும்;
பரலோகத்தின் பிதா.-பரிசுத்தத்தையே விரும்புகிறார்!
பாவ மோப்பம் பிடிக்கும் நாய்போல.. திருக்குள்ள இருதயத்தின் திருட்டுத்தனம் திருத்தப்பட தடவப்படும் மருந்தே..
மனதுருக்கம்;
ஆனாலும்,
மனதின் இறுக்கம் தொடருமானால்,
அங்கே மறு பேச்சுக்கு இடமில்லை;
மகிமைக்கும்...வழியில்லை:
ஆம் -- தேட ஒரு காலமுண்டு..
இழக்க ஒரு காலமுண்டு
காப்பாற்ற ஒரு கால முண்டு
எறிந்துவிட ஒரு காலமுண்டு;
[ பிரசங்க:3:6
எனவே, குளிர்ந்த நீர் போன்ற சத்தியமே...
சில நேரம் சுடும் வெந்நீராய் சுத்திகரிக்கும்.
நீதியில் நிறைவடைந்து..
அநீதியின் மேல்..
எரிச்சல் உள்ள..
பரிசுத்தரின் வசனமே..சத்தியம்.
ஆமென்
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
உருவமற்ற பாறை ஒன்றை உற்று கண்ட சிற்பி - தான்,
உருவாக்கும் படைப்பாற்றலால் உயிரூட்ட சித்தமானார்!
கருப்பிடிக்கும் கருவியாக... சிற்றுண்டி எடுத்துக் கொண்டு
பெருங்கல்லை உடைத் தெடுத்து.. பெரும் பணியை துவக்கினாரே!
சாத்தியமாகிய சம்மட்டி... சந்தேகத்தை உடைத்து
அசத்திய மென்னும் அறியாமையை அடித்து பொடித்தது;
கருங்கல் என்னும் ஸ்தரக்கல் காணும் படி,
வெறும்... மண் எல்லாம் அகற்றப்பட்டது.
சிற்பாசாரிக்கு சிறந்த சித்திறக்கள் கிடைத்தது இப்போது;
கல்லை நல்வழிக்கு கொண்டு வரும் படிக்கு,
இப்போதே, உளியின் உழைப்பு தேவைப்பட்டது.
சிற்றுளி என்னும் கொத்தும் உளி,
குழி குழியாய்க் கொத்தும்போது,
வழிவழியாய் வந்தவினை...
வலிகலோடு விலகியதே;
பாரம்பரிய பழக்க வழக்கம்....
பாசம் நிறைந்த சுற்றமும்.. நட்பும்;
பற்றிப்பிடித்த.-லட்சியங்கள்;
நிரம்பப் பிடித்த... உயிராசைகள்.
இவைகள் எல்லாம், உளியின் உடைப்பில் உதிர்ந்து போயின;
ஆனாலும்.... கல் மேல் கொண்ட நோக்கம், கரையாமல் இருந்த சிற்பி;
உளியின் கூர்மையை உரசிக் கூட்டினாரே;
பட்ட அடியெல்லாம் பற்றாது என்று;
கொத்தும் உளியால் குத்திப் பெயர்த்தார்.
ஐயா;
'நான் ஒரு கல்.. அதனாலே எனக்குள் கடினமுண்டு உமது மனம் கருணையன்றோ...
ஆனாலும்... கடுமையான உளியாலே உலுக்குகிறீரே...
இப்படிக்கூறி... கல்லும் கரைந்தது [அழுதது]
கருங்கல்லான... வெறுங்கல்லே... நீ
இருக்கின்றாய் மங்கலாய்;
அங்கலாய்ப்பு இல்லாதிருந்தால்... நீ
அங்கமாவாய் என் ஆலயக்கல்லாய்!!
கொஞ்சம் பொறு....
உளியை மாற்றுகிறேன் என்று சொல்லி,
மிகச்சிறிய உளி ஒன்றை எடுத்தாரே;
அன்பான சிற்பாசாரியின்...
அக்கறையுள்ள உளி,
இலகுவான உளி..
கொஞ்சம் இனிமையான உளி
இனி பயயில்லை. வலியில்லை
ஆனாலும்... இதோ...
குருதிபொங்கும்.. இறுதிக் குத்தும்,
மன உறுதி கலங்கும் குத்தூசியுமான உளி இதுவே;
முந்தைய உளியோ...என் உடலைப் பெயர்த்தது;
இந்த பிந்தைய உளி.. என் உயிரையே அசைத்தது;
ஆம்.. இது என் நேச உளி:
நான் நேசித்த உளி
ஆனால்... யோசித்துக் கூடப் பார்க்கவில்லை.
இது பாசாங்கு உளி...என்று:
சிற்பாசாரி சொன்னார்...
சிரித்துக்கொண்டே...
உனக்கு வலித்தால் தான்...
நீ ஜீவனுள்ள கல்:
வலிக்க வில்லை என்றால்...
நீ வழிக்கல் [மைல்கல்] போல இருப்பாய்:
உன் கையே...உன் கண்ணைக் குத்தினாலும்
உடணிருப்போரே...
உன்னைத் துன்புறுத்தினாலும்,.
உண்மையாய் நீ இருந்தால்.--
உயர்த்தப்படுவாய் மகிமைக்கு
உளியின் கூர்மையைக் கண்டு கலங்காதே:
உன்னைக் கையில் எடுத்த என்னை நோக்கிப்பார்:
ஏனெனில்...நான் உன்னைக் காக்கின்ற இறைவன்!!
ஆமென்!!
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
3. சந்தோஷம்
நீதியின் செயல்முறை விளைவே... சந்தோஷம்;
இருதய சமாதானத்தின் வெளிப்பாடு... சந்தோஷம்;
துன்மார்கன் பெறமுடியாத சொத்து... சந்தோஷம்;
பாவம் செய்யாமல் விலக்இருக்கும் போது வரும்; சந்தோஷம்.
சந்தேக உள்ளம் பெறமுடியாது...சந்தோஷம்;
சங்கீத புஸ்தகத்தின் சத்தியம்... சந்தோஷம்; கசப்பான வேப்ப மரத்தின் பழம் இனிப்பதுபோல
துன்பத்தின் ஆழத்திலும் சுகமான... சந்தோஷம்:
தெலீலாளின் மடியில் சிம்சோனின்--- சந்தோஷம்:
தெளியாத மயக்கத்தில் வந்த, அந்த சந்தோஷம்;
உயிரைப் பறித்த கண்ணி அந்த, சந்தோஷம்;
உண்மையுள்வர்க்கு ஆபத்து இந்த...சந்தோஷம்;
பரலோகத்தில் மிகுந்து வரப்போகும் சந்தோஷம்.--அது,
காணாமல் போன ஆடு [மனுக்குலம் ] கண்டு பிடிக்கப்பட்டதால் வரும் சந்தோஷம்.
ராஜ்ஜியத்தை நமக்குக் கொடுப்பதனால் பிதாவுக்கு சந்தோஷம்.
மகிமையுள்ள சந்நிதானத்தில் ..நம்மை மாசற்றவர்களாய் நிறுத்துதில் சந்தோஷம்.
குமாரனை சகல பரியூரணத்துக்கும் உயர்த்துவதில், அப்பாவுக்கு சந்தோஷம்
குமாரனுக்குள் சகலமும் கூட்டிச் சேர்க்கப்படுவதில் சர்வ மகா சிருஷ்டிகருக்கு..சந்தோஷம்; குமாரனின் கீழ்ப்படிதலே பிதாவுக்கு மிகுந்த சந்தோஷம்,
குமாரனுக்குள்---குணசாலிகளை கூட்டிச் சேர்ப்பதால்,
சர்வ குடும்பத் தலைவருக்கு சம்பூரணமான.... சந்தோஷம்;
என்... கர்த்தரின் சந்தோஷம்...இதோ!
பேசி சில தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்.
பேசாமல் நின்ற போதும் தீர்க்கதரிசனம் நிறை வேற்றினார்.
கிரியைகளினால் சில தீர்க்கதரிசணம் நிறைவேற்றினார்.
அமைதியாய் இருந்து தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்.
அவமானப்பட்டும். சில தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்.
அங்கமெல்லாம் கிழிக்கப்பட்டும் . சில தீர்க்கதரிசனம் நிறை வேற்றினார்;
தமக்கு முன்பாக பிதாவினால் வைக்கப்பட்ட சந்தோஷம்,
தமக்குள்ளாக அதை தரிசித்து நடந்ததினால் பெற்றார் அந்த சந்தோலும்;
ஆபிரஹாயின் சந்தோஷம் விசுவாசத்தின் மூலமே;
யோபுவின் சந்தோஷம் பொறுமையாய் சகித்தபோதே;
தானியேலின் சந்தோஷம் சிங்கத்தின் நடுவில் பக்திவைராக்கயமே;
அப். பவுலின் சந்தோஷம சிறைச்சாலையில் பட்ட
அடிகளின் மத்தியில் தானே;
அற்ப சந்தோஷமும் உண்டு, ஆனந்த சந்தோஷமும் உண்டு;
உழைப்பில்லாமல் பெறும் சந்தோஷம்... தண்ணீரில் உப்பைப்போல கரைந்துபோகும். உபத்திரக்குகையிலே உணர்ந்து பெறும் சந்தோஷம்,
அதுவே... உலகம் எடுக்க முடியாத சந்தோஷம்:
"உள்ளதல் நிறைவு கொண்டால்,
அது, உள்ளத்தின் சந்தோஷம்.
என் ஆண்டவரின் பெயரை நினைக்கும் போதெல்லாம்....
இருதயத்தில் தேன் தடவினது போல இனிமையான ஒரு சந்தோஷம்!.
நான்...புது சிருஷ்டியாய் வளர்ச்சி அடைவதில் தான்,
என்னை ஜெநிப்பித்தவருக்கு சந்தோஷம்:
ஆம். "உங்கள் துக்கம் சந்தோஜமாய் மாறும்" என்று
: சந்தோஷக்காரணர் சொல்லியிருக்கிறார்!!.
ஆமென்!
கவிஞர் வேளாங்கன்னி.
திண்டுக்கல்
கடலிலே வீசப்பட்ட வலையில் சிக்கிய மீன்..நான்;
அது பரலோக ராஜ்யத்தின் கண்ணுக்குத் தெரியாத வலை;
வலை கரைக்கு வர வர பிடியும் இறுகியது.
நான் வலைக்குள்..வளைக்கப்பட்டேன்.
அன்பின் கயிறுகளால் கட்டி இழுக்கப்பட்ட வலை...இது
ஆசை காட்டி மோசம் போக்கும் கண்ணி அல்ல இந்த வலை;
இதை வீசினவர் மீனவர் அல்ல... அவர் என் மீட்பர்;
ஆம்! அவர் என்னைப் பிடிக்கவில்லை - மீட்டுக்கொண்டார்.
அலையின் அலைக்கழிப்புக்கும்
ஆழியின் ஆழத்துக்கும்...
என்னைக் காப்பாற்றின... கர்த்தரின்
வனையும் வலையே இந்த ரட்சிப்பின் வலை;
கரையிலே என்னைப் பிரித்தெடுத்து...
கீழ்ப்படியும் நல்லமீன் என்று என்னைக் கண்டு,
வரப்போகும் ராஜ்யத்தின் சத்துணவாக என்னைப்
பதப்படுத்தும், பக்குவக்காரரே-என்னைப் பிடித்தார்;
கடலின் (உலகின் ] சந்தோஷம் அடிக்கடி எனக்குள்
வந்து... வந்து போனாலும்...
அவைகள் என்னை
வெறும் கருவாடாக மட்டுமே மாற்றும்:
நல்ல மீனையும். கெட்ட மீனையும் பிரிக்கிறவர்,
நம்பிக்கைக்கு உரியவராய் கையில் எடுத்துள்ளார்.
உருவம் பெருத்த நீர் ஜந்துக்கள் வலிமை உள்ளவைகள்;
ஆனால்- சில சிறுமீன்களும்.. சுவையுள்ளவைகளே;
எளிய மீனாகிய என்னையும் கண்டு,
எப்படித்தான்...என்னையும் நம்பினாரோ...!!!
நான் எப்படிப்பட்ட மீனாக இருந்தாலும்,
ஒருநாள்... வீணாகத்தான் போயிருப்பேன்;
கடல்நீரை விட்டு...கரையேறி திரு வசன தண்ணீரில்
என்னை நீந்த விட்டவர்...
தண்ணீரில் கழுவி...கழுவி, என்னை நல்ல மீனாக மாற்றுகின்றார்!!
வழுக்கும் தன்மை எனக்கிருப்பதால்...அவரின்
வனையும் கையைவிட்டு...துள்ளி துள்ளி ஓடினாலும்,
அள்ளி.. அள்ளி.. கையில் எடுத்து,
சிறு கள்ளுகளால். கிள்ளிக் கிள்ள செல்லமாய்ச் செதிலைத் தட்டி..குத்தும்
முள்ளைக் கூட புல்லைப் போல் ஆக்குகிறார்.
ஈன மீனுக்கெல்லாம் இரக்கம் கிடைக்குமோ?
வலையில் பிடித்த மீனவர் வருடிக் கொடுப்பாரோ?
துள்ளத்துடிக்கும் மீனை அள்ளி அணைப்பாரோ?
இதோ...மனுஷரைப் பிடிக்கும் இந்த மகா மீட்பர்
வரப்போகும் மீன்களுக்கு வழிகாட்டி ஆக்குகிறார்:
சிறு மீன்களை ஓட விட்டு... பெருமீன்களை கொத்திப் பிடிக்கும் கொக்குகளின் [சாத்தான்)
கொடுக்குக்கு..விடுவித்து..
என்னைக் கொள்ளைதரம் காப்பாற்றி
நல்ல மீனாய்க் கூடையில் சேர்த்து
நறுமணம் [அழியாமை ] வீசச் செய்தார்!!
வலையின் இறுக்கத்தை விட.. அவரின்
இரக்கம் பெரிதாய் இருக்கின்றதே!!
அல்லேலூயா
கவிஞர் திண்டுக்கல் வேளாங்கண்ணி
திண்டுக்கல்
9789387638
ராஜாவே தன் ராஜ்யத்தை கலைப்பானோ...?
அழகின் மினுக்கினால் மேட்டிமையாய் யோசித்தார்;
சிருஷ்டித்தவரின் சாயலை அடைவதற்கு பதிலாய்,
சிருஷ்டிகரின் ஸ்தானத்தை இச்சித்ததால், தனக்கு தானே சதி செய்தார்.
கட்ட நினைத்த தன் பாவராஜ்யத்தின் அஸ்பாரத்தை தானே இடிக்க துவங்கினான்!
பாவ சம்பள மரணத்தில் தீமை அனுபவம்
தன்னால் மாடு மிரளும் வல்லமை தனக்குண்டு - என்றென்னுமாப்போல்,
சாத்தான் தன் சேட்டையினால்,
கடவுளின் கை சாட்டைபோல் ஆனானே......
இன்னதென்று அறியாமல்,
பிரமாண்ட தோற்றமான பலூன் ஒன்று,
சிறு குண்டூசி முனையால் உடைவது போல்,
சாத்தான் கட்டின சர்வாதிகார ராஜ்யம் சாதரணமாய் அகற்றப்படும்!
அழியாமைக்கு உயர்த்தப்பட்டார் ஆண்டவர்.
அழிவுக்கு நியமிக்கப்பட்டவன் அகங்காரன்!
பொய்யாய் கட்டின மாயராஜ்யம் தனக்குத்தானே விரோதமாயிருப்பதினால்..
நிலைநிற்காமல் போவது சத்தியம்தானே!
மனதை சுத்தம் செய்யும் சத்துரு பெருவெள்ளம் போல் சபையின் மீது வீசினாலும்,
மெல்லியமாவை சலிக்கும் சல்லடை சாத்தான்தானே...
அழித்தொழிக்க எண்ணும் சாத்தானால் சபை களஞ்சியம் சேரும்;
கதிராய், பக்குவப்படும்.
சபை தலையோடு இணையும்
சீக்கிரத்தில் தன் தலையை தானே நசுக்கச் செய்யும் சத்துருவின் கோபத்தால்
இறைவன் தாமே மகிமைப்படுவார்.
ஜீவ நாசம் செய்யும் சுயநலத்தை -
விரும்பிச் செய்யும் - எதிராளி;
பரிசுத்த நகரத்தின் கறையை அகற்றும் பாத்திரமாய் செயல்பட்டு தனக்கு தானே அழிவை தேடும் சாத்தான்;
இப்படியாக தன்னைத்தானே துரத்திக் கொண்டான்!!
எப்போதும் சிருஷ்டிகருக்கு முன்பாக நின்று பிழைக்க வகையுமில்லை.
வாய்ப்பும்...... இல்லை!!
அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்;
அவருடைய கையைத் தடுத்து,
அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்."
(தானியேல் 4: 35)
சகோதரர் அருள் வேளாங்கண்ணி
திண்டுக்கல்
9789387638
குறையொன்றும் இல்லை, யா - வே
மனுஷரின் கண்ணுக்கு புலப்படாத இறைவன்.
மனிதரில் ஒருவரும் கண்டிராத இறைவன்
அதனாலே எனக்கு குறை ஒன்றும் இல்லை;
குமாரனில் வெளிப்பட்ட என் சிருஷ்டிகரே..
குமாரனுக்குள்ளே நீர் மகிமைப்பட்டீரே.
குறை ஒன்றும் இல்லை நிறைவான இறைவா!
நன்மைகளைச் செய்திடும் நல்லவராய் நீர் இருக்க.
வேறொரு நன்மையில்லை, ஜோதிகளின் பிதாவே;
குறை ஒன்றும் இல்லை நிறைவான இறைவா...
குறை ஒன்றும் இல்லை யா-வே
குறை ஒன்றும் இல்லை. தேவா
ஒன்றும் இல்லை - யா - வே " ஒரு மனமாய் நிற்கிறீர்... இறைவா!
நீர்..ஒரே மனதாய் இருக்கின்றீர்- இறைவா...[2]
உம்மை ஒருமனப்பட்டவர்கள் மட்டுமே காண்பார்
ஒன்றாக இருக்க.. குறை ஒன்றுமில்லை;
நீதியில் அரசாட்சி செய்கின்ற "யா - வே"-[2]
இறை இயேசு நடந்திட்ட பாதை தான் அதுவே...
நிறைவாக வைத்திட்ட மாதிரியும் இதுவே...
குறை ஒன்றும் இல்லை... பூரண சற்குணா
குறை ஒன்றும் இல்லை இறைவா!
குறை ஒன்றும் இல்லை யா-வே
பாவியர்க்கிறங்கி... கிருபையை பெருக்கி
நிலையான ஜீவனை கொடுக்கின்ற நித்தியா[2]
குறை ஒன்றும் இல்லை பூரண சற்குணா
யாரும்... வெறுக்காத சத்தியரே [2]
உம் வழியில்...
ஏது இடை நிற்கும்
கருணைக் கடல் அன்றோ...
என்றும் இருந்திட.. ஏது குறை எனக்கு...
என்னோடு இருந்திட.. ஏது குறை எனக்கு...
ஒன்றும் குறைவில்லை.. நிறைவான இறைவா!
ஒன்றும் குறைவில்லை நிறைவான "யா-வே"
குறை ஒன்றும் இல்லை பூரண சற்குணா..
நிறைவான எந்தன் இறைவா
குறை ஒன்றும் இல்லை யா-வே"
சகோதரர் அருள் வேளாங்கண்ணி
திண்டுக்கல்
9789387638
அண்ட சராசரங்கிளை உண்டாக்கினவராகிய
உமக்கு முன்பாக இந்த பூமி எம்மாத்திரம்! பூமியின் பிரமாண்டத்துக்கு முன்பாக
மனிதனுடைய மண்ணால் ஆன சரீரம் எம்மாத்திரம்!
மரிக்கும் படியான பாவ சாயலிலே
மனுஷீக ஞானம் எம்மாத்திரம்? உண்டாக்கப்பட்ட வஸ்துவாகிய நான்... என்னை
உருவாக்கின சிருஷ்திகருக்கு முன் எம்மாத்திரம்?
பூஜ்யத்தில் பூஜ்ஜியம் தானே நான்!
ஆனாலும் நீர் என்னை பிரமிக்கத்தக்க
அதிசயமாய் உண்டக்கினீர்.
அதிலும் விசேஷமாக என்னை பிரித்தெடுத்து
உருவேற்படுத்துகின்றீர்
அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை பிரிக்கும்
அதிசயத்தை செய்கிறவர் நீரன்றோ!!
ஆம். விஷமகாரனாகிய என்னை விசேஷித்தவனாக்கினீர்;
கசப்பான கீரையை கொடுத்தது.. எண் ஜீவனுக்கு,
காப்புரிமையை அளித்திட்டீர்.
நான் உமக்குள் இருப்புக் கொள்ளும் படிக்கு
என்னை இருப்பு ஆயுதம் போல உருக்கி வார்த்து
என் ஆண்டவரின் சாயலை எனக்குள் அச்சுப் பதித்தீர்.
நீர் என்னைக் கையிலெடுக்க நான் எம்மாத்திரம்?
நீர் என்னை கருப்பிடிக்க நான் எம்மாத்திரம்
குலைத்து போடத்தக்க பாத்திரமான என்னை
குறைவுகளை நீக்கி குதூகலம் காணச் செய்தீர்!
இந்நேரம் மாத்திரம்... நீர் என் கூட இல்லாமல் இருந்திருந்தால்
கணநேர மாத்திரத்தில் நான் இடம் மாறிப் போயிருப்பேன்;
பிறந்த ஊரை மாற்றி.. புது சிருஷ்டியாக என்
பெயரை மாற்றி... உருமாற்றி... உமக்கு முன்பாக,
என்னை... நிறைவாக்கி நிலைநிறுத்த
என்றைக்குமே, நான் எம்மாத்திரம்
அம்மாத்திரம்... இம்மாத்திரம் எப்போதுமே
எதிராளியின் ஆத்திரமும் உம்முன் எம்மாத்திரம்?
சானைக் கல்லால் அரைக்கப்பட்டும்,
நொறுங்கி போகாமல்,
சாதனைக் கல் எட்டும் வைரக்கல்லாம்
சபையின் வெற்றியும் அதற்கு காரணமும் நீர் மாத்திரமே
எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்
என்னதான் சிறந்ததானாலும் சரீரம் எம்மாத்திரம்?
ஆம். என் ஆண்டவரின் பாத்திரம்
அதிலே பங்கெடுப்பதில் மாத்திரம்
நானும் ஆவேன்... அதில் ஒரு கோத்திரம்!!
எப்போதுமே நான் எம்மாத்திரம்!
எப்போதுமே ஆசீர்வதிக்க ப்படுவதினால்
என்றும் சொல்வேன்... நன்றி!! ஆமென்
நீங்கள் அல்ல... கடவுளே என்னை இங்கே (எகிப்துக்கு)
அனுப்பினார்;
கவலைப்படாதீர்... என்ற யோசேப்பு:
என்னை கட்டுங்கள்... அவர்களை போகவிடுங்கள்;
சகோதரருக்காக தன்னையே கட்டக் கொடுத்த யூதா;
இவர்களை நானா பெற்றேன்?
என்னை கொன்று போடும்;
இசுரயேலர் வழிநடத்தும் என்று வேண்டிக் கொண்ட மோசே;
இந்த ஆடுகள் என்ன செய்தது...
தவறு என்னுடையதே;
என்னை தாண்டியும் என்று தாழ்ந்து பேசின தாவீது.
தனது நண்பனை காப்பாற்ற சில நேரம்,
தன்னையே பணயம் வைத்த யோனத்தான்;
நான் தான் உங்களுக்கு தேவை: எண் சீஷர்களை
போகவிடுங்கள்... என்றே சொன்னார் என் கர்த்தர்;
இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும்... என்று
தன்னை கொன்றவர்களுக்காக பேசின ஸ்தேவான்.
தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களும்,
தம்மாலே உண்டானதல்ல,
தன்னை எதிர்க்கிறவர்களாலும்... அல்ல;
தம்முடைய பிதாவே அனுமதித்திருக்கிறார்!
இதுவே நம் கர்த்தருடைய உத்தம நிதானிப்பு,
ஆம்... அதனாலேயே
அவர் வையப்படும் போது பதில் வையவில்லை:
பாடுபடும்போது...
பொறுங்கள் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என்று...
அவர்களை பயமுறுத்தவும் இல்லை;
என் இறைவனே... என் சிருஷ்டிகரே...
இந்த உணர்வுள்ள இருதயத்தையும்
உத்தம நிதானிப்பையும்... எனக்குள் உறுதிப்படுத்தும்.
இந்த நிலையிலேயே, மன ரம்மியமாயருக்க எனக்கு கற்றுதாரும்.
மனுஷர் எனக்கு என்ன செய்ய முடியும்?
நீர் அறியாமல் எனக்கு என்ன நேர்ந்து விடும்?
மனிதர்களின் கோபம் உன் மகிமையை விளங்க பண்ணும்;
மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர்!!
ஒருவரை தாழ்த்தவும்... அதே ஒருவரை
உயர்த்தவும் உம்மால் தானே கூடும்!
நல்லது அல்லாத எதையும்... எப்போதும்,
நீ எனக்கு செய்ய மாட்டீர்... ஆம்,
நடக்கிறது எல்லாமே... எனக்கு நல்லது மட்டும் தானே;
குறையே சொல்ல முடியாத சுத்தவான் நான் இல்லையே
மறைவானது உமக்கு முன் ஒன்றும் இல்லையே;
நீதி மாறாத மகா இறைவனே... என்னில் நீர் செய்வது,
நீதியின் சுத்திகரிப்புகள் தானன்றோ!
உம்முடைய புடமிடுதலினால்... நான்
பொன்னாக விளங்குவேன்!
அப்பா... நீ அடிக்கும் சிறு அடிகள் கூட,
இவ்வளவு ஆசிர்வாதமாய் உள்ளது;
இனி... நீர் அரவணைத்தால், அது
இன்னும் எவ்வளவு ஆச்சரியமாய் இருக்குமோ!!!
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
புளிப்பில்லாத அப்பமே...
சுவையில்லாத அப்பமே...
இந்த சிலுவையின் அப்பம்:
கடவுளின் பார்வையில் இதுவே சிறந்த அப்பம்:
புளிப்புடன்... லேசான உப்பும் கலந்து,
நெருப்பினால் முருவலாக சுடப்பட்டதும்,
புளிப்பின் நொதியினால்... உள்ளாக
புகுத்தப்பட்ட காற்றின் வினையினால்
உண்டான உப்புதலும்... கூடிய
மென்மையும், நாவுக்கு மேன்மையுமான அப்பம் இதுவே;
ஆனால்... புளிப்பு சுவை சேர்க்கப்படாவிட்டால்,
அப்பம், உப்பு சப்பில்லாத, சுடப்பட்ட மாவு மட்டுமாமே;
அதிலே நொடியும் இல்லை, உப்புதலும் இல்லை;
கடிப்பதற்கும், சுவைப்பதற்கும் இது,
கொஞ்சம் கடினமான அப்பம் தானே;
ஏன் இது சிறுமையின் அப்பம்?
நிசான் 14ல், பஸ்கா ஆடு பலியானது:
மீசர்களுக்காக தேவ ஆட்டுக்குட்டி தன்னையே பலியாக்கியது;
நிசான் 15ல் புளிப்பில்லா அப்பா பண்டிகை துவங்கியது;
யூதர்களின் கொண்டாட்டமும் அங்கே விளங்கியது.
இதோ, தங்களின் மெய்ப்பன் கொல்லப்பட்டு
சிதறடிக்கப்பட்ட சிறுமந்தை,
சிறைக்கும், சித்தரவதைக்கும் பயந்து ஓடி, ஒளிந்து;
பூட்டின வீட்டுக்குள்ளும், புகலிடமான இடங்களிலும்,
முடங்கிப் போய்... ,
எதிர்கால பயத்துடனும், ஏமாந்த பதட்டத்துடனும்,
ஏங்கி அழுது, ஏனென்று கேட்க ஆளில்லாமல்,
ஏக்கத்தோடும், என்ன முடியாத துக்கத்துடனும்,
உண்ண முடியாத உணர்வுகளை,
உள்ளடக்கிய அப்பம் தான்... இந்த
புளிப்பில்லாத அப்பம் ஆகிய சிறுமையின் அப்பம்.
ஊருக்கெல்லாம் இது கொண்டாட்டமான பண்டிகை தான்;
உடனாசாரியர்கோ, சுய விருப்பங்கள்.
கொல்லப்பட வேண்டிய பண்டிகை;
உலக கொண்டாட்டங்களின் கொட்டங்கள்
நமக்குள் அடங்கி முடக்கப்படும் பண்டிகை;
எனவே தான்... இது உலகப்பிரகார சந்தோஷங்களுக்கு
உப்பு சப்பில்லாத பண்டிகையாமே!
உயர்ந்த பக்குவத்தை நமக்குள் வளர்க்கும்... இந்த
சிறுமையின் அப்பமே நமக்கு மிகச்சிறந்த அப்பம்.
வெறும் மூன்று நாட்களே, நீடித்திருந்த இந்நிலை
வரும் மூன்றாம் நாளிலே, நிறைந்த மகிழ்ச்சியானது.
சிறுமையின் அப்பம் போன்ற இந்த அருமை ஜீவியம்,
மறுமையில் நிற்கத்தக்க மகிமையில் போய் முடியும்.
இதுவே, சிறுமையின் அப்பம்...
கூடவே கசப்புக்கீரை! ஏன்?
ஆம். அப்பம் பிட்டவருக்கே ஆசீர்வாதமான துன்பக் கிண்ணம்.
எரியும் நெருப்பில் என்னை ஊற்றி எரிப்பதைப் போல,
இவரா தேவகுமாரன்?
இவரை இறைவன் ரட்சிக்கட்டுமே!
இப்படி நம்மை மனம் கசந்து அசந்து போக செய்யும்
அவமான பேச்சே, இந்த கசப்பு கீரை!
சிறுமையின் அப்பமோ, கசப்புக்கீரையோ,
சிரசிலே முள்முடி தரித்தவர் முன்னே நடக்கையில் சிரேனே ஊர் சீமோனாகிய எனக்கு
சிலுவை ஓர் பாரமில்லையே!! இதே
சிந்தை எனக்குள் தொடர்ந்தால்
போகுமிடம் வெகு தூரம் இல்லையே!!! ஆமென்.








Comments
Post a Comment