A PRAYER TO MY FATHER - Br. ARUL VELLANKANNI

a prayer to my father

A Prayer to my Father

சர்வ வல்லபிதாவே-- என்னை சத்துருவின் கையில் ஒப்புவிக்காதேயும்;

நீதியுள்ள பிதாவே -- என்னை மனுஷர் நியாயம் தீர்க்க விட்டுவிடாதேயும்;

அன்புள்ள பிதாவே -- என்னை மாயவலைக்குள் சிக்கவிடாதேயும்:

ஞானமுள்ள பிதாவே - என்னை அஞ்ஞானம் மேவ விடாதேயும்;

கிருபையுள்ள பிதாவே என்மை உரிமையாய் காத்துக் கொள்ளும்;

இரக்கமுள்ள பிதாவே. என்னை கிறக்கத்துக்குள்  மூழ்க விடாதேயும். 

கருணையுள்ள பிதாவே, என்னை கரு மேகம் சூழ விடாதேயும். 

சாந்தமுள்ள பிதாவே, என்னை சாவுக்குள் கையளிக்காதேயும்;

ஜோதிகளின் பிதாவே, என்னை சோதனைக்குள்ளேயே விட்டுவிடாதேயும்;

ஆதியந்தம் இல்லாதவரே-என்னன அந்தகாரத்தில் அடைக்க விடாதேயும்;

ஜீவனுள்ள பிதாவே என்னை மரணத்துக்குள் மரிக்க விடாதேயும்.

நீடிய பொறுமையுள்ளவரே, என்னை பரிதவிப்புக்குள் பதறவிடாதேயும்;

ஒன்றாகிய ஒரே மெய் இறைவா, என்னை ஒரே நோக்கத்தில் நிலைக்கச்செய்பும்;

ஒருவராய் சாவாமை உள்ளவரே... என்னை அழியாமைக்கு தகுதிப்படுத்தும்.

ஒரே மனமாய் இருப்பவரே..என்னில் இருமனம் புரள விடாதேயும்;

நல்ல பிதாவே..என்னனக் கள்ளர்கையில் அகப்பட விடாதேயும்;

வானத்துக்கும் பூமிக்கும் இறைவா, என்னை வாதைக்குள்ளே விட்டு விடாதேயும்;

சர்வலோகத்துக்கும் இறைவா, என்னை, இறுமாப்பு ஆள விடாதேயும்;

பாதாளத்துக்கும் .. மரித்தோர்க்கும் இறைவா... என்னை பாவப் பாம்பு விழுங்க விடாதேயும்;

பரலோகத்தின் இறைவா... என்னை பாளையமிறங்கி பாதுகாத்தருளும்;

இறைவா... தூங்காதவரும். உறங்காதவருமானவரே, என்னை.. சோர்வுக்கும் அசதிக்கும் அப்புறப்படுத்தும்

அடைக்கலமும் பெலனுமான இறைவா.... என்னை . பெலவீனத்துக்கும்--பெரும் பாதகத்துக்கும் தூரப்படுத்தும்;

ஆணையிடும் இறைவா, அடங்கி நடக்கும் படி ஒருமுகப்படுத்தும்;

பரிசுத்தமான இறைவா.. எனக்குள் இருதய சுத்தம் ஓங்கச்செய்யும்;

விளையச் செய்கிற இறைவா, என்னில் களையை நீக்கி கதிராக்கியருளும்;

இருக்கிறவராகவே இருக்கிற இறைவா,  
என்னைப்பாதி எடுத்துக்கொள்ளாதேயும்; 

ஜெயம் கொடுக்கிற இறைவா-என்னை புத்தத்துக்கு ஆயத்தப்படுத்தும். 

என் கண்ணீரை துருத்தியில் சேர்த்திருக்கிறவரே,
என்னைக்-கழுவி கழுவி சுத்திகரியும்;

என்துக்கத்தை... ஆனந்த களிப்பாய் மாற்றிப்போடுகிறவரே, 
உமக்குள்- உள்வாங்கிக் கொள்ளும்;'

முடிவுலே மகிமையிலே ஏற்றுக்கொள்ளுகிறவரே; என்னை.. என் ஆண்டவர் மூலம் இப்படி ஆசிர்வதியும் பிதாவே!!

ஆமென்!!


Comments

Post a Comment