விளக்குக: எசேக்கியேல் 37:16

"மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக்கொள். அதில் "யூதாவுக்கும் அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உரியது" என்று எழுது. பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில் "யோசேப்புக்கும் அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் உரிய எப்ராயீமின் கோல்" என்று எழுது."
அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி, அவற்றை ஒன்றாகச் சேர்.
— எசேக்கியல் 37:16, 17
இந்த வசனம் இரண்டு கோல்களை பற்றிப் பேசுகிறது, அவை இஸ்ரயேலின் இரண்டு பிரிவுகளைக் குறிக்கின்றன:
- யூதாவின் கோல் – யூதா மற்றும் பென்யமீனை குறிக்கிறது.
- யோசேப்பின் கோல் (எப்பிராயீம்) – 10 இஸ்ரயேல் கோத்திரங்களை குறிக்கிறது.
யோசேப்பின் சேஷ்ட புத்திர பாகம்:
- 1 நாளாகமம் 5:1 – யோசேப்புக்கே சேஷ்ட புத்திர பாகம் வழங்கப்பட்டது.
- ஆதியாகமம் 48:19 – யோசேப்பின் மகனாகிய எப்பிராயீம் பெரிய மக்களினங்களாக பெருகுவர்.
- உபாகமம் 33:17 – எப்பிராயீத்தின் வம்சத்தார் பெருகுவார்கள்.
- சங்கீதம் 108:8 – எப்பிராயீம் என் தலையின் பலன்.
இந்த வசனங்களைப் பார்த்தால், யோசேப்பின் கோல் என்பது எப்பிராயீமைக் குறிக்கின்றது, இது 10 கோத்திரங்களை அடையாளப்படுத்துகிறது.
இஸ்ரயேல் ராஜ்யத்தின் பிளவு:
- 1 இராஜாக்கள் 12:25 – சாலொமோன் ராஜாவின் காலத்திற்குப் பிறகு, இஸ்ரயேல் இரண்டு பாகமாகப் பிரிந்தது. யெரொபெயாம் 10 கோத்திரங்களின் முதல் ராஜாவாக இருந்தார்.
- ஏசாயா 7:9 – எப்பிராயீமின் தலைநகர் சமாரியா ஆகும்.
இரண்டு பிரிவுகள்:
- யூதா (2 கோத்திரம்) – யூதா மற்றும் பென்யமீன்.
- எப்பிராயீம் (10 கோத்திரம்) – மீதமுள்ள இஸ்ரயேல் கோத்திரங்களை குறிக்கிறது.
இரண்டு ராஜ்யங்களுக்கிடையே போட்டி:
- ஏசாயா 9:21 – மனாசே, எப்பிராயீமுடன் போர் செய்யும்; இருவரும் சேர்ந்து யூதாவுக்கு எதிராக இருப்பார்கள்.
- எரேமியா 50:19 – கடவுள் இஸ்ரயேலை திரும்ப அழைக்கும் போது, அவர்கள் எப்பிராயீமில் திருப்தியடைவார்கள்.
- ஓசியா 6:4 – எப்பிராயீம் 10 கோத்திரங்களை குறிக்கின்றது.
இந்த 10 கோத்திரங்கள் பெரும்பாலும் யூதாவுக்கு எதிராக இருந்தன. அவர்கள் பிரிந்திருக்கும் நிலை பல தலைமுறைகளாக தொடர்ந்தது.
கடவுளின் பார்வையில் - ஒரே ஜனமாக
- எசேக்கியேல் 21:25 – இஸ்ரயேலின் துன்மார்க்க அதிபதி என்பது சிதேக்கியா ராஜாவை குறிக்கிறது.
- கடவுள் இன்னும் அவரை "இஸ்ரயேலின் தலைவர்" என்று அழைக்கிறார், இது கடவுளின் பார்வையில், யூதாவும் இஸ்ரயேலும் ஒரே ஜனமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
தொடர்ந்து பிரிந்திருந்தபோதிலும், கடவுள் எப்பொழுதும் இஸ்ரயேலை ஒரே ஜனமாகவே பார்க்கிறார்.
கடவுளின் திட்டம், யூதாவையும், இஸ்ரயேலையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதாகும். எசேக்கியேல் 37:16 வசனம் போல, இரண்டு கோலும் கடவுளின் கையில் ஒன்றாக ஆகும்.
கிறிஸ்துவுக்குள், எல்லா நம்பிக்கையாளர்களும் ஒரே ஜனமாக இருக்கிறார்கள்; அதுபோலவே, கடவுள் இஸ்ரயேலையும் ஒன்றாக்கவிருக்கிறார். இந்த தீர்க்கதரிசனம், கடவுள் அவருடைய ஜனத்தை திரும்பக் கொண்டு வரும் நாளில் நிறைவேறும்.
Comments
Post a Comment